ஆப்நகரம்

இலங்கையில் ரூ.1 கோடி ஹெராயின் கடத்தியதாக தமிழர்கள் கைது

இலங்கையில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் கடத்தியதாக தனுஷ்கோடியைச் சேர்ந்த இருவரை இலங்கை கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.

Samayam Tamil 3 Feb 2018, 7:33 pm
இலங்கையில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் கடத்தியதாக தனுஷ்கோடியைச் சேர்ந்த இருவரை இலங்கை கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.
Samayam Tamil two tamil fisherman arrested by srilankan navy for allegedly smuggling drugs
இலங்கையில் ரூ.1 கோடி ஹெராயின் கடத்தியதாக தமிழர்கள் கைது


இலங்கையின் கட்டுப்பாட்டில் மன்னார் வளைகுடா பகுதியில் அந்நாட்டு கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த தனுஷ்கோடியைச் சேர்ந்த இரண்டு தமிழர்கள் நாட்டுப்படகில் வந்து கொண்டிருந்தினர். அவர்களை மடக்கிப் பிடித்த இலங்கை கடற்படையினர், இருவரையும் சோதனையிட்டனர்.

அப்போது, இருவரும் 425 கிரம் எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் கடத்தி வந்திருப்பதும், அவற்றின் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் என்பதையும் கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து அவர்களை கைது செய்த கடலோர காவல் படையினர், தலைமன்னார் பகுதிக்கு கொண்டு சென்றனர்.

அடுத்த செய்தி