ஆப்நகரம்

ஒன்னுல்ல, இனிமே இரண்டு ரயில்; சென்னைக்கு தண்ணீரை அள்ளிக் கொண்டு வரும் தமிழக அரசு!

சென்னையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, தமிழக அரசு மற்றொரு ரயிலுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

Samayam Tamil 23 Jul 2019, 2:15 pm
தலைநகர் சென்னை வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தில் தவித்து வந்தது. இதனைப் போக்க ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
Samayam Tamil Chennai Water Train


இதற்கான ஏற்பாடுகள் ரூ.65 கோடி செலவில் தீவிரமாக நடைபெற்றன. ஜோலார்பேட்டை அடுத்த மேட்டுசக்கரகுப்பத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட நீர் தேக்க தொட்டியில் இருந்து, ரயில் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

பின்னர் ரயில்களில் தண்ணீர் ஏற்றப்பட்டு, சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. ஒரு ரயில் மூலம் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து வரப்பட்டது. கடந்த 10 நாட்களாக இந்த சேவை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் சென்னையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மேலும் ஒரு ரயிலுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதில் 50 வேகன் மூலம் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லும்.

Chennai Rains: செம மழை இன்னைக்கு இருக்கு; அதுவும் இத்தனை இடத்துல - சென்னை வானிலை அப்டேட்!

இதன்மூலம் சென்னைக்கு தினசரி 50 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. அடுத்த சில நாட்களில் இந்த அளவு 1 கோடி லிட்டராக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cauvery Water: மகிழ்ச்சியில் தமிழக விவசாயிகள்; மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்த காவிரி நீர்!

இந்த 2வது ரயில் ஜோலார்பேட்டையில் இருந்து இன்று காலை முதல் இயங்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிலவில் நீர் இருந்தால் எங்களிடம் முதலில் கூறுங்கள் – சென்னை மெட்ரோ ட்வீட்!

அடுத்த செய்தி