ஆப்நகரம்

மதுரை அருகே மின்சாரம் தாக்கி இருவர் பலி

மதுரையில் மின்சாரம் தாக்கி பெயின்டர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

TNN 7 Oct 2016, 4:12 pm
மதுரை: மதுரையில் மின்சாரம் தாக்கி பெயின்டர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Samayam Tamil two workers electrocuted in madurai
மதுரை அருகே மின்சாரம் தாக்கி இருவர் பலி


பசும்பொன் நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (50), மற்றும் பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் ஆகியோர் விகேபி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்துள்ளனர். மொட்டை மாடியில் பெயின்ட் அடித்துக் கொண்டிருந்த இவர்கள் ஏணி மீது ஏறி வேலை பார்த்துள்ளனர்.

அப்போது தாழ்வாக சென்ற மின் கம்பியை பிடித்த ஒருவரை காப்பாற்ற மற்றொருவர் முயற்சித்ததால் இருவரும் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் இது குறித்து மின் வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருவரது உடலும் ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

English Summary :

Two wall painters were electrocuted in Madurai on Friday morning when they came in contact with a low-hanging live wire.

அடுத்த செய்தி