ஆப்நகரம்

8 நவம்பர் 2016.. ஞாபகம் வருகிறதா..

பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த நாள் இன்று

Samayam Tamil 8 Nov 2018, 6:50 am
இன்று இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நாள்.
Samayam Tamil modi demon


2016ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி மத்திய அரசு 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை மதிப்பு நீக்கியது. இதற்குப் பின் நாட்டில் புழக்கத்தில் இருந்த பணத்தின் மொத்த மதிப்பு ரூ.7.8 லட்சம் கோடியாக குறைந்து வரலாறு காணாத சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்த நடவடிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல எதிர்த்தன. ஆதரவு தெரிவித்த பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் தற்போது அந்த நடவடிக்கையை ஆதரித்தது தவறு என பேட்டி அளித்துள்ளனர். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அந்த நடவடிக்கையை மத்திய அரசின் பெரும் சாதனை என பிரச்சாரம் செய்து வருகிறது.

ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டதும் ஒட்டு மொத்த நாடே ஸ்தம்பித்தது. ஏ.டி.எம் மையங்களில் ஒரு நாளுக்கு 10,000 ரூபாயும்,ஒரு வாரத்திற்கு 20,000 ரூபாயும் மட்டுமே எடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல், சில நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது. ஏ.டி.எம் மையங்கள் செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனால் புதிய ரூபாய் நோட்டு எடுக்க முடியாமல் பெரும் சில்லறை தட்டுபாடு ஏற்பட்டது. அப்போது தான் பேடிஎம் ஆப் மக்களிடையே பரவலாகத் தொடங்கியது. இதன் மூலம் ஆன்லைன் வர்த்தகம் சூடுபிடிக்கத் துவங்கியது. ரூபாய் நோட்டுத் தடையும், பேடிஎம் ஆப் முன்னேற்றமும், பிரதம் மோடியின் அரசு கார்ப்பரேட் அரசு என்று அரசியல் கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கினர். அப்போது காங்கிரஸ் ராகுல், பேடிஎம்-ஐ பே டூ மோடி (Pay To Modi – PayTm) என்று விமர்சித்தார்.

இவ்வாறு ரூபாய் நோட்டுத் தடை அறிவிக்கப்பட்ட பின்னரும், மோடி உறுதியளித்த கருப்புப்பணம் மட்டும் கேள்விக்குறியாகவே இருந்தது. ‘எல்லாப் பணமும் கருப்புப்பணம் இல்லை. எல்லா கருப்புப்பணமும் பணமாக இல்லை. அவை நிலங்களாகவும், சொத்துக்களாகவும் உள்ளது’ என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது. பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட இந்நாள், ஒரு வரலாற்று முக்கியமானதாகவே கருதப்படுகிறது.

அடுத்த செய்தி