ஆப்நகரம்

கோயம்புத்தூரில் மினிடிரக் மோதி இரண்டு பேர் பலி ஒருவர் படுகாயம்

கோவையில் நடந்த சாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 20 Nov 2018, 1:07 am
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்த நிலையில், ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil cover-pic


பாப்பம்பட்டியிலிருந்து சூலூருக்கு, நேற்று காலை 11.30 மணியளவில் மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது அவர்களுக்கு எதிரே வந்த சிறிய கனரக வாகனம் ஒன்று, மோட்டார் சைக்கிளை மோதி சென்றது.

இதில் செலக்கரச்சலை சேர்ந்த ஆர். தினேஷ்குமார் (27) மற்றும் அப்பநாயக்கன்பட்டி புதூரை சேர்ந்த சி. முத்து கார்த்திக் (24) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரழந்தனர்.

அவர்களுடன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து வந்த ஏ. கார்த்திக் விஷ்ணு (22) என்ற இளைஞர், படுகாயங்களுடன் உயிர் தப்பினார். தற்போது அவருக்கு, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக கோயம்புத்தூர் போலீசார் பேசும் போது, தினேஷ்குமார் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற நிலையில், அவருடன் ஏ. கார்த்திக் விஷ்ணு மற்றும் முத்து கார்த்திக் இருவரும் பின்னால் அமர்ந்து சென்றுள்ளனர்.

அப்போது பாப்பம்பட்டியிலிருந்து சூலூர் செல்லும் சாலையில், மினி டிரக் மோதி இளைஞர்கள் தினேஷ்குமார் மற்றும் ஏ. கார்த்திக் விஷ்ணு, உயிரிழந்தனர். தற்போது ஏ. கார்த்திக் விஷ்ணு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பாப்பம்பட்டி போலீசார், மினி டிரக் ஓட்டுநர் ஆர். ரமேஷ்குமாரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி