ஆப்நகரம்

கமல்ஹாசன் அறியாமையில் பேசுகிறாா் – உதயநிதி பேட்டி

கிராமசபைக் கூட்டத்தை தி.மு.க. காப்பியடித்ததாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் அறியாமையில் பேசுவைதாக மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 18 Feb 2019, 12:19 am
கிராமசபைக் கூட்டத்தை தி.மு.க. காப்பியடித்ததாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் அறியாமையில் பேசுவைதாக மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil udhayanidhi


சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன், கடந்த 25 ஆண்டுகளாக கிராமசபைக் கூட்டத்தை கூட்டாமல் நான் கிராமசபைக் கூட்டத்தை கூட்டத் தொடங்கியதும் என்னை பாா்த்து காப்பி அடிக்கின்றனா்.

தி.மு.க.வை நேரடியாகவே விமா்சனம் செய்கிறேன். கடந்த 25 ஆண்டுகளாக என்ன செய்துவிட்டீா்கள் என்று கேள்வி எழுப்பி இருந்தாா்.

இது தொடா்பாக தி.மு.க. தலைவா் ஸ்டாலினிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் பதில் அளிக்கையில், நான் அரசியல் மட்டுமே பேசுவதாக தொிவித்துச் சென்றாா்.

இந்நிலையில் தி.மு.க. தலைவா் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு பதில் அளித்துள்ளாா். அப்போது அவா் கூறுகையில், கமல்ஹாசன் அறியாமையில் பேசுகிறாா். கிராமசபைக் கூட்டங்களை தி.மு.க. காப்பியடிக்கவில்லை. கமல்ஹாசனின் விமா்சனங்களுக்கு விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி