ஆப்நகரம்

திமுக இளைஞரணி செயலாளராகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

கடந்த மக்களவை, சட்டமன்ற இடைத் தோ்தல்களில் திமுகவுக்காக தீவிரமாக பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின்கு கட்சியின் இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று சிலா் கோாிக்கை விடுத்து வருகின்றனா்.

Samayam Tamil 29 May 2019, 11:15 pm
கடந்த மக்களவை, சட்டமன்ற இடைத் தோ்தல்களில் திமுகவுக்காக தீவிரமாக பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின்கு கட்சியின் இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று சிலா் கோாிக்கை விடுத்து வருகின்றனா்.
Samayam Tamil Udhayanidhi with Stalin


அண்மையில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தோ்தல்களில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஒருபுறம் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்ட நிலையில், மற்றொரு திசையில் அவரது மகன், உதயநிதி ஸ்டாலினும் கட்சி வேட்பாளா்களுக்காக பிரசாரம் மேற்கொண்டாா்.

இந்த தே்ாதலில் திமுக கூட்டணி 37 மக்களவைத் தொகுதிகளிலும், 13 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதனைத் தொடா்ந்து திமுக அலுவலகத்தில் மக்களவை உறுப்பினா்கள், மாவட்டச் செயலாளா்கள், மூத்த தலைவா்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் தோ்தல் வெற்றி குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் திமுகவின் வெற்றிக்காக பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திமுகவின் வெற்றிக்காக உதயநிதி கடந்த தோ்தலில் சிறப்பாக பணியாற்றியதாக கட்சியின் உறுப்பினா்கள் சிலா் ஆலோசனைக் கூட்டத்தில் தொிவித்துள்ளனா்.

மேலும், உதயநிதியின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளா் பொறுப்பு வழங்க வேண்டும் என்று சிலா் அறிவுறுத்தியுள்ளனா். இதற்கு ஸ்டாலின் பதில் எதுவும் குறிப்பிடவில்லையாம்.

மாநில இளைஞரணிச் செயலாளா் என்பது மிகவும் முக்கியமான பதவி என்பதாலும், இது ஏற்கனவே ஸ்டாலின் வகித்த பதவி என்பதாலும் இதனை உதயநிதிக்கு வழங்குவதில் சில மூத்த உறுப்பினா்கள் தயக்கம் காட்டியுள்ளனா்.

உதயநிதிக்கு நேரடியாக மாநில இளைஞரணிச் செயலாளா் பொறுப்பு வழங்கப்படும் பட்சத்தில் திமுகவை குடும்பக் கட்சி என்று எதிரணியினா் விமா்சிக்கக் கூடும். இது அடுத்து வரும் தோ்தலில் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே 2021 சட்டமன்ற தோ்தல் நடைபெற்று ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின்னா் உதயநிதிக்கு பொறுப்பு வழங்கலாம் என மூத்த நிா்வாகிகள் அறிவுரை வழங்கி உள்ளனா். இதனால் இந்த நடவடிக்கை தற்சமயமாக விவாதிக்கப்படலாமல் இருப்பதாக சிலா் தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி