ஆப்நகரம்

பாஜக ஆளும் மாநிலங்களில் அதிக தடுப்பூசி... தமிழகத்தில் பாரபட்சம் ஏன்? - உதய்

பாஜக ஆளும் மாநிலங்களை காட்டிலும் தமிழக மக்கள் தொகையில் குறைந்த பட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் குற்றசாட்டு

Samayam Tamil 30 May 2021, 6:42 pm
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் பரவல் வேகமடுத்த நிலையில் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு எடுத்தது. அந்த விசாரணை கடந்த 4ம் தேதி தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி கொண்ட அமர்வுக்கு வந்தது. அப்போது மத்திய, மாநில அரசு தரப்பில் அதிகாரிகள் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தனர்.
Samayam Tamil கோப்புப்படம்


வழக்கை விசாரித்த நீதிபதிகள், '' தமிழகத்துக்கு குறைவான அளவில் தடுப்பூசி மருந்துகள் ஒதுக்கீடு செய்துள்ள மத்திய அரசின் நடவடிக்கை அதிருப்தி அளிக்கிறது. மாநில அரசுகள் நேரடியாக தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களில் இருந்து தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய இயலாத நிலை உருவாகியுள்ளதால், தமிழகத்துக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில் மே மாத இறுதியிலும் தமிழக மக்கள் தொகையில் 10% அளவுக்கே தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளதாக திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

'எனக்குன்னு தனி மவுசு இருக்கு'... ஸ்டாலின் அட்வைஸராக மாறிய ஓபிஎஸ்..!

அது தொடர்பாக அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, '' தமிழக மக்கள் தொகையில் 10% அளவுக்கே தடுப்பூசிகளை தந்துள்ள ஒன்றிய அரசு, பாஜக ஆளும் குஜராத்,கர்நாடக மாநிலங்களுக்கு அவற்றின் மக்கள் தொகையில் 20%அளவுக்கு வழங்கியுள்ளது. இப்பேரிடர் நேரத்தில் அனைத்து மாநிலங்களையும் ஒன்றாக கருதி பாரபட்சமின்றி தடுப்பூசிகளை வழங்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும். கொரோனாவை வெல்ல தடுப்பூசியே ஆயுதம்.

மக்களும் தடுப்பூசியிட ஆர்வத்துடன் முன்வருகின்றனர். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவையில்தான் அதிகளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசிகளை வழங்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதை புள்ளிவிவரங்கள் அம்பலப்படுத்துகின்றன'' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி