ஆப்நகரம்

அப்பா சொன்னால் தேர்தலில் போட்டியிடுவேன் : உதயநிதி ஸ்டாலினின் தன்னடக்க பேச்சு!!

திமுக தலைவர் ஸ்டாலின் அனுமதித்தால், உள்ளாட்சித் தேர்தலில் தான் போட்டியிட தயார் என்று அக்கட்சியின் இளைஞரணி செயலரான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 15 Nov 2019, 11:36 pm
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னால், தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக, ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார்.
Samayam Tamil usmks


அரியலூர் மாவட்டம் குழுமூரில், நீட் தேர்வில் தோல்வியுற்றதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் நினைவாக, படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில், இந்த படிப்பகத்துக்கு நூல்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற்றது. படிப்பக வளாகத்தில் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவரிடம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

ஸ்டாலின் மிசா கைதிதான்... நானே சாட்சி: ஆடிட்டர் துக்ளக் குருமூர்த்தி

அதற்கு. "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னால், உள்ளாட்சித் தேர்தலில் தான் போட்டியிட தயாராக இருக்கிறேன்" என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில், விருப்ப மனுக்களை வழங்கும் பணி சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை மேற்கு மாவட்ட அலுவலகத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் சிலர், சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட ,உதயநிதி ஸ்டாலின் பெயரில் ஜெ அன்பழகனிடம் விருப்ப மனு அளித்துள்ளனர்.

இதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும் உதயநிதி பெயரில் இளைஞரணி நிர்வாகிகள் விருப்ப மனுக்கள் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த செய்தி