ஆப்நகரம்

இதுக்காகதான் இ பாஸ் இன்னமும் ரத்து செய்யப்படல... உதயநிதி புது விளக்கம்!!

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவரும் நிலையில், இந்த முறையை தமிழக அரசு இன்னமும் ரத்து செய்யாததற்கு இதுதான் காரணமென திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் புதுவிளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 26 Aug 2020, 11:35 pm
சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில், புதிய உறுப்பினர்களுக்கு கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உறுப்பினர் அட்டையை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
Samayam Tamil udhayanithi


இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

திமுக இளைஞரணியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் பணி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. தென்சென்னை மாவட்ட திமுக நிர்வாகிகள் 1.2 லட்சம் உறுப்பினர்களை இளைஞரணியில் இணைத்துள்ளனர். உறுப்பினர்களை சேர்க்கும் பணி தொடர்ந்து நடைபெறும்.

வினையான விநாயகர் சிலை... ட்விட்டரில் ட்ரெண்டாகும் தேவையில்லாத ஆணி உதய் ஹேஷ்டேக்!!

திமுக தேர்தல் பணிகளை தொடங்கக் கூடாது என்பதற்காகத்தான் இ-பாஸ் முறையை தமிழக அரசு நீட்டித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களை எங்களால் சந்திக்க இயலவில்லை. அதனால்தான் இ-பாஸ் முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். கூடிய விரைவில் இதுதொடர்பாக அறிவிப்புவரும் என எதிர்பார்க்கிறோம்.

நீட் தேர்வை ஆரம்பத்தில் இருந்தே திமுக எதிர்த்து வருகிறது. கொரோனா அச்சம் காரணமாக நீட் தேர்வை தற்போது ரத்து செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இதற்காக சட்டப்பேரவைக் கூட்டி அவசரத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.

அடுத்த செய்தி