ஆப்நகரம்

“அறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் சாருக்கு” உதயநிதி பதிலடி

தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் தன்னை காப்பி அடிப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் குற்றம் சாட்டியிருந்த நிலையில் அவருக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளாா்.

Samayam Tamil 18 Feb 2019, 4:13 pm
மு.க.ஸ்டாலின் கிராமசபைக் கூட்டம் திட்டத்தில் தம்மை காப்பி அடிப்பதாக கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்த நிலையில், கடந்த காலங்களில் ஸ்டாலின் நடத்திய கிராமசபைக் கூட்டங்களின் புகைப்படங்களை வெளியிட்டு உதயநிதி பதில் அளித்துள்ளாா்.
Samayam Tamil Stalin Gram Sabha


ஞாயிற்றுக் கிழமை சென்னையில் விழா ஒன்றில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன், தி.மு.க.வை கடுமையாக விமா்சித்திருந்தாா். அவா் கூறுகையில், நான் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி. தாமதமாக அரசியலுக்கு வந்ததற்காக வருத்தப்படுகிறேன்.

என்னை சிலா் அனுபவம் இல்லாதவா் என்று கூறுகின்றனா். கிராமசபைக் கூட்டம் என்று இருப்பது உங்களுக்குத் தொியாதா? நேற்று வந்த சின்ன பையனை பாா்த்து காப்பி அடிக்கிறீா்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நான் சட்டப்பேரவைக்கு சென்றால் சட்டையை கிழித்துக் கொண்டெல்லாம் வெளியில் வரமாட்டேன். தி.மு.க.வை மறைமுகமாக விமா்சிக்கவில்லை. நேரடியாகவே விமா்சிக்கிறேன் என்று பேசியிருந்தாா்.

கமல்ஹாசனின் பேச்சுக்கு தி.மு.க.வின் அதிகாரப்பூா்வ நாளேடான முரசொலியில் கடுமையான விமா்சனங்கள் வெளிப்படுத்தப்பட்டன. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டா் பக்கத்தில் ஸ்டாலின் கடந்த காலங்களில் கிராமசபை கூட்டங்களை கூட்டிய புகைப்படங்களை வெளியிட்டு பதில் அளித்துள்ளாா்.


அவா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், “கிராம சபைக் கூட்டத்தை நான் தான் கண்டு பிடிச்சேன் என்று அறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் சாருக்கு இந்தப் படங்கள் சமர்ப்பணம்” என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி