ஆப்நகரம்

திருப்பூர்: தேவையின்றி வெளியே வரும் வாகனங்கள் பறிமுதல் : உடுமலை ராதாகிருஷ்ணன்

கொரோனா தடுப்பிற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு மையம் அமைக்கப்பட்டு, தொடர்புக்கு 0421-1077 , 29711199 ஆகிய இலவச எண்களையும் அறிவுத்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

Samayam Tamil 25 Mar 2020, 4:32 pm
ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி
Samayam Tamil udumalai-radhakrishnan


நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய வாழ்க்கை பாதிக்காதவாறு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும், வெளிநாட்டிலிருந்து வந்த 172 பேர் வீட்டுக்கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் , கொரோனா தடுப்பிற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு மையம் அமைக்கப்பட்டு, தொடர்புக்கு 0421-1077 , 29711199 ஆகிய இலவச எண்களையும் அறிவுத்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

திருப்பூரில் உற்பத்தி செய்யப்படுவதன் மூலம் தினமும் 1 லட்சத்திற்கும் அதிகமான மாஸ்க் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பபட்டு வருகின்றன. திருப்பூர் மாநகராட்சியில் 10 இடங்களிலும் , புறநகரில் 31 இடங்களில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. எல்லைப்பகுதியில் விசாரணைக்கு பிறகே அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்படுகின்றன.சாலைகளில் அத்திவாசிய பணிதவிர அநாவசியமாய் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என பேட்டியளித்தார் .

அடுத்த செய்தி