ஆப்நகரம்

இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது - விஜயகாந்த்

சென்னை: தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாமல் பல லட்சகணக்கான இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

TNN 21 Aug 2016, 3:52 pm
சென்னை: தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாமல் பல லட்சகணக்கான இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
Samayam Tamil uncertain future for young people vijayakanth
இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது - விஜயகாந்த்


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : "தமிழ்நாட்டில் மொத்தம் 84 லட்சம் இளைஞர்களுக்கு வேலையில்லாத நிலை இருப்பதாக புள்ளிவிவரம் ஒன்று வெளியாகி இருக்கிறது. உலக முத‌லீட்டாளர் மாநாடு நடத்தி ஏறத்தாழ ஓராண்டு ஆகியும், அதன்மூலம் தொழிற்சாலைகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அரசு ஏற்படுத்தியதாக நிரூபிக்கப்படவில்லை.
வேலைவாய்ப்பின்மை தொடர்பாக கடந்த வாரம் சட்டசபையில் அதிமுகவும் திமுகவும் ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்தவில்லை . வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தையே பரிசாக அளிக்கக்கூடியதாக அதிமுக அரசு இருக்கிறது.

சட்டசபையில் தினந்தோறும் ஒரு நிகழ்வை ஏற்படுத்தியும், போட்டி சட்டசபையை நடத்தியும் சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும் முனைப்பில் திமுக செயல்படுகிறது" என விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அடுத்த செய்தி