ஆப்நகரம்

சேலத்தில் ஒரே நாளில் 47 ரவுடிகள் கைது!

சேலம் மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய திடீர் தேடுதல் வேட்டையில் , ஒரே நாளில் 47 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 15 Feb 2019, 6:02 pm
சேலம் மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய திடீர் தேடுதல் வேட்டையில் , ஒரே நாளில் 47 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil safbaln


சேலம் மாநகரில் சமீபகாலமாக வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொது மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். தனியாக நடந்து செல்லும் பெண்களின் நகையை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த காவல் ஆணையாளர்சங்கர்உத்தரவின் பேரில்,சேலத்தில் உள்ள ரவுடிகளை பற்றிய முழு விவரங்கள் திரட்டப்பட்டது.

இதனடிப்படையில் எல்லா பகுதிகளுக்கும் கால்வதுறையினர் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டையில்இன்று மட்டும் 47 ரவுடிகளைகாவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் சென்ற மாதம் 31 ஆம் தேதி சுமார் 37 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி