ஆப்நகரம்

கேப்டன் வாழ்க! என்று கூறிய தொண்டருக்கு பளார்!! பளார்!!! விட்ட விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேச்சைக்காட்டிலும், பொதுக் கூட்டங்களில் அவர் நடந்து கொள்ளும் முறை பெரும் பரபரப்பை ஏற்படுத்தும்.

TNN 11 Feb 2017, 2:08 pm
தேமுதிக தலைவர் தொடர்ந்து பிரச்சாரங்களில் ஈடுபடும் போது தொண்டர்களை அடிப்பதும், நாக்கை கடிப்பதும், மிரட்டல் விடுவதும், பத்திரிக்கையாளர்களை தாக்குவதும் வழக்கமான ஒன்று. இவர் அப்படி செய்யவில்லை என்றால் தான் ஆச்சரியம். ஒரு கட்டத்தில் மீம்ஸ் ஹீரோவாக இருந்தவரும் விஜயகாந்த் தான். சிறிது காலம் இந்த அதிரடி ஆக்ஷனுக்கு ஓய்வு கொடுத்திருந்த விஜயகாந்த் தற்போது மீண்டும் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.
Samayam Tamil ungaludan naan program vijayakanth slapped his party cadres at perambalur meeting
கேப்டன் வாழ்க! என்று கூறிய தொண்டருக்கு பளார்!! பளார்!!! விட்ட விஜயகாந்த்


தமிழகம் முழுவதும் உங்களுடன் நான் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்று பெரம்பலூருக்கு வந்திருந்தார். அப்போது தொண்டர் ஒருவர் விஜயகாந்தின் அருகே சென்று கேப்டன் வாழ்க என்று சத்தமிட்டு கத்தியுள்ளார். இதில் கோபமடைந்த விஜயகாந்த், தொண்டர் கன்னத்தில் பளார் என்று அறைந்துள்ளார்.

இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு தொண்டரை அங்கிருந்து வெளியேற்றிய பின்பு விஜயகாந்த் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Ungaludan naan program Vijayakanth slapped his party cadres at perambalur meeting.

அடுத்த செய்தி