ஆப்நகரம்

விவசாயிகளுக்கு குட் நியூஸ்: ஸ்டாலின் கடிதத்தால் நடவடிக்கை!

தமிழ்நாட்டுக்கு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

Samayam Tamil 27 Oct 2021, 10:15 am
மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்திய நிலையில் தமிழ்நாட்டுக்கு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
Samayam Tamil tn urea shortage


தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்ட கிராமங்களில் நடவு மற்றும் நேரடி விதைப்புக்கு அடியுரமாக டிஏபி, உரம் தேவைப்படுகிறது. இந்த உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டிஏபி உரத்துக்கான மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கான கூடுதல் மானியத் தொகையை ஒன்றிய அரசு ஏற்காததால், உர நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியைக் குறைத்துள்ளன. இறக்குமதியும் குறைக்கப்பட்டுள்ளதால் உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் இதே நிலை நீடித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தை பொருத்தவரை, தர வேண்டிய நிலுவை உரத்தை ஒன்றிய அரசு தராமல் கால தாமதம் செய்துள்ளது. இந்த நிலையில் நிலுவை உரத்தை வழங்க வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினார்.
தமிழக அரசின் தீபாவளி பரிசு: கூட்டுறவுத் துறை அமைச்சர் அறிவிப்பு!
அந்தக் கடிதத்தை ஒன்றிய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியாவை நேரில் சந்தித்து திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு வழங்கினார்

“தமிழகத்தில் சம்பா சாகுபடி என்பது முகவும் முக்கியமான ஒன்றாகும். இது விரைவில் தொடங்க உள்ளது. அதனால் அதற்கு தேவையான டிஏபி மற்றும் உரத்தை உடனடியாக வழங்க வேண்டும் என ஒன்றிய அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒன்றிய அரசு தரப்பில் நிலுவையில் இருக்கும் 1.59 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உட்பட உரங்களை வழங்க வேண்டும். இதைத்தவிர கூடுதலாக 25ஆயிரம் மெட்ரிக் டன் டிஏபியும், 10 ஆயிரம் மெட்ரிக் டன் எம்ஓபி உரங்களையும் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது” என கூறினார்.
EXCLUSIVE: சசிகலாவை கட்சியில் இணைக்கலாம்: அதிமுக மாஜி அமைச்சர்!
இந்நிலையில் ஒன்றிய அரசு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்டாலின் எழுதிய கடிதத்தால் ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இருந்த போதும் 1.59 லட்சம் மெட்ரிக் டன் யூரியா கேட்கப்பட்ட நிலையில் 90 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் பற்றாக்குறையை போக்குவது கடினம் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி