ஆப்நகரம்

கர்நாடகாவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை, உடனே தடுத்து நிறுத்தாவிட்டால், கடும் பின்விளைவுகள் ஏற்படும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

TOI Contributor 12 Sep 2016, 10:15 pm
கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை, உடனே தடுத்து நிறுத்தாவிட்டால், கடும் பின்விளைவுகள் ஏற்படும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
Samayam Tamil union minister pon radhakrishnan warns karnataka
கர்நாடகாவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை


நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது வேதனை அளிப்பதாக தெரிவித்தார். இதனை தடுக்க அம்மாநில அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றும், தவறினால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் எனவும் குறிப்பிட்டார். அதற்கு கர்நாடக அரசே முழு பொறுப்பேற்க வேண்டிவரும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டி உள்ளார்.

அடுத்த செய்தி