ஆப்நகரம்

பரந்தூர் விமான நிலையம்: அது அவங்க பிரச்சினை - கை கழுவிய ஒன்றிய அரசு!

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்தை மாநில அரசு தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 27 Jan 2023, 4:11 pm
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை மத்திய அரசு தேர்வு செய்யவில்லை ஒன்றிய அரசு தான் தேர்வு செய்தது. அங்கு நடக்கும் மக்கள் பிரச்சினைகளை ஒன்றிய அரசு தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என நிலையில் ஒன்றிய தரைவழி மற்றும் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil vk singh


ஒன்றிய இணை அமைச்சர் வி கே சிங் அரசு மற்றும் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நெல்லை வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

“கேந்திர வித்யாலயா பள்ளிகள் துவங்க மாநில அரசும், மாவட்ட நிர்வாகங்களும் இடத்தை தேர்வு செய்து தந்தால் அதற்கான பணிகளை தொடங்குவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது.

ஈரோடு கிழக்கு - எடப்பாடி எடுத்த சர்வே: இது மட்டும் நடந்தா லைஃப் டைம் செட்டில்மென்ட்!

தூத்துக்குடி விமான நிலையத்தின் விரிவாக்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் விமான நிலையத்தை திறப்பதற்கான பணிகள் நடைபெறும்.

சேலம் சென்னை எட்டு வழிச்சாலையில் பசுமை வழிச்சாலையாக மாற்றும் செய்து திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளில் பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கான இடத்தை மாநில அரசுதான் தேர்வு செய்து கொடுத்தது. அதில் ஒன்றிய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. மக்களின் போராட்டம் குறித்து மாநில அரசு முடிவு செய்து கொள்ள வேண்டும்.

நாகர்கோவில் திருவனந்தபுரம் நான்கு வழி சாலை விரிவாக்க பணிகளில் உள்ள பிரச்சனைகளை தீர்த்த பின்பு பணிகள் மீண்டும் தொடரும்” என தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி