ஆப்நகரம்

திறந்தவெளி கழிப்பிடமில்லா மாவட்டமாக ‘திருச்சி’யை அறிவித்தது உள்துறை அமைச்சகம்!

திறந்தவெளி கழிப்பிடமில்லா மாவட்டமாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

TNN 11 Jan 2018, 2:22 pm
திருச்சி: திறந்தவெளி கழிப்பிடமில்லா மாவட்டமாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
Samayam Tamil union ministry declares trichy as open defecation free district
திறந்தவெளி கழிப்பிடமில்லா மாவட்டமாக ‘திருச்சி’யை அறிவித்தது உள்துறை அமைச்சகம்!


இதுதொடர்பாக பேசிய மாவட்ட ஊரக வளர்ச்சி நிறுவன அதிகாரிகள், கடந்த ஓராண்டாக மாவட்டத்தின் 14 பகுதிகளில் கழிப்பிடங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதனை சுகாதாரம், கல்வி, சமூகநலத்துறை உள்ளிட்டவை மூலம் மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஊரக வளர்ச்சி நிறுவன அதிகாரி மலர்விழி கூறுகையில், கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 404 கிராம பஞ்சாயத்துக்களில் கீழ்மட்டத்தில் இருந்து கழிப்பிடங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

எங்கெல்லாம் திறந்த வெளி கழிப்பிடங்கள் இருந்ததோ, அங்கெல்லாம் மாற்று ஏற்பாடுகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டன. கிராமப் பகுதிகளில் பொதுக் கழிப்பிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Another feather in the cap for #SwachhBharatMission. Tiruchirappalli district in Tamil Nadu has been declared #OpenDefecationFree. pic.twitter.com/uGP1fcgx8I— Swachh Bharat (@swachhbharat) January 10, 2018 தூய்மை இந்தியா திட்ட நிதி மூலம், மாவட்டம் முழுவதும் 90,000 தனித்த கழிப்பிடங்கள் கட்டப்பட்டன. திறந்தவெளி கழிப்பிடங்களை பயன்படுத்தாமல், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டன.

வரும் காலங்களிலும் பொதுமக்களுக்கு தொடர்ந்து கழிப்பிடங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. திருச்சி உட்பட 16 மாவட்டங்கள் திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லா மாவட்டங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஒட்டுமொத்த தமிழகமும் திறந்தவெளி கழிப்பிடமில்லா மாநிலம் என்ற சிறப்பை பெற, இன்னும் 16 மாவட்டங்களில் மாற்றம் வர வேண்டும்.

Union ministry declares Trichy as open defecation free district.

அடுத்த செய்தி