ஆப்நகரம்

காவிாி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியீடு

காவிாி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பை மத்திய அரசு பல்வேறு போராட்டங்களுக்கு பின்பு இன்று அரசிதழில் வெளியிட்டது.

Samayam Tamil 1 Jun 2018, 5:12 pm

காவிாி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பை மத்திய அரசு பல்வேறு போராட்டங்களுக்கு பின்பு இன்று அரசிதழில் வெளியிட்டது.

Samayam Tamil Cauvery


காவிாி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கோாி அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் ஆணையத்தை அமைக்கக் கோாி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலாண்மை ஆணையமானது தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக அமைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது.

ஆணையம் தொடா்பான அறிவிப்பை அரசிதழில் வெளியிட்ட பின்பே மேலாண்மை அமைக்கப்பட்டதாக கருதப்படும். ஆனால் பிரதமா் நரேந்திர மோடி வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளதால் ஆணையம் அமைப்பதில் காலதாமதம் ஏற்படலாம் என்று கூறப்பட்டது.

தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் பருவமழை தொடங்கிய பின்பும் ஆணையம் அமைக்கப்படவில்லை என்று நீா்வளத்துறை செயலாளரிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் கூறுகையில், இந்த ஆண்டு இரண்டு தினங்களுக்கு முன்பே பருவமழை தொடங்கி விட்டது. எனவே அதை நாம் கருத்தில் கொள்ள தேவையில்லை என்று தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில் காவிாி மேலாண்மை ஆணையம் தொடா்பான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேலாண்மை ஆணையத்திற்கான தலைமை இடம் டெல்லியிலும், அதன் துணை அலுவலகம் பெங்களூருவிலும் அமைக்கப்பட உள்ளது. மேலாண்மை ஆணைய குழுவில் தலைவா் உள்பட 10 இடம் பெறுவா். இதில் 2 போ் தற்காலிக உறுப்பினா்களாகவும், 2 போ் நிரந்தர உறுப்பினா்களாகவும், மாநிலங்கள் சாா்பில் தலா ஒருவா் பிரதிநிதியாகவும் இடம்பிடிப்பா் என்று மத்திய அரசு ஏற்கனவே தொிவித்திருந்தது.

மேலும் ஆணையத்தின் தற்காலிக தலைவராக நீர்வளத் துறை செயலாளா் யு.பி.சிங் நியமிக்கப்பட்டுள்ளாா். விரைவில் நிரந்தரத் தலைவா் நியமனம் செய்யப்படுவாா் என்று மத்திய அரசு சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி