ஆப்நகரம்

சர்வதேசளவில் பிரபலமான ப்ரீமியம் தர பீர் தமிழகத்தில் விற்பனைக்கு அறிமுகம்

சர்வதேசளவிலான பிரபலமான, ப்ரீமியம் தரத்திலான பீர் குறைந்த விலை தமிழகத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

Samayam Tamil 8 May 2019, 6:58 pm
ஐரோப்பிய நாடுகளில் புகழ்பெற்ற ப்ரீமியம் தர ஆம்ஸ்டெல் பீர் தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தில், மிகவும் சுவை பெற்ற பீரான இது இந்தியா உட்பட மொத்தம் 100 நாடுகளில் விற்பனையில் இருந்து வருகிறது.
Samayam Tamil சர்வதேச தரத்திலான ப்ரீமியம் தர பீர் தமிழகத்தில் அறிமுகம்
சர்வதேச தரத்திலான ப்ரீமியம் தர பீர் தமிழகத்தில் அறிமுகம்


ஆம்ஸ்ட்ராமின் புகழ்பெற்ற ஆம்ஸ்டெல் என்ற நதியின் பெயர் இந்த பீருக்கு வழங்கபப்ட்டுள்ளது. மேலும், உலகின் தலை சிறந்த சுவையை வழங்கும் பீர்களில் ஏழாவது இடத்தில் ஆம்ஸ்டெல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச தரத்திலான ப்ரீமியம் தர பீர் தமிழகத்தில் அறிமுகம்


முன்னதாக இந்த பீர் கர்நாடகா, கேரளா மற்றும் பாண்டிச்சேரியில் விற்பனைக்கு வந்தது. அங்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்தே தற்போது தமிழகத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இங்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புவதாக ஆம்ஸ்டெல் பீரை தயாரிக்கும் United Breweries Limited நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ப்ரீமியம் தரத்திலான பீர்கள் கிடைப்பது மிகவும் குறைவாக உள்ளது. அதை நிவர்த்தி செய்யவே ஆம்ஸ்டெல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 650 மில்லி பீர் குப்பி ரூ. 150/- விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி