ஆப்நகரம்

திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் உருது துறை தொடங்க உருது பள்ளி ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் உருது துறை ஒன்றை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று உருது பள்ளி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

Samayam Tamil 26 Feb 2019, 11:32 am
திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் உருது துறை ஒன்றை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று உருது பள்ளி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
Samayam Tamil jo


வேலூர் மாவட்டம்,வேலூரில் தமிழ்நாடு உருது பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் அப்துல் அஜீஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொறுப்பாளர் பஷ் ருதீன் செயலாளர் முகமது அஜ்மல் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.

மாநிலம் முழுவதும் உருது பள்ளிகளில் காலியாக உள்ள உருது ஆசிரியர் பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும், தற்போது நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் உருது மொழியில் பயிலும் மாணவர்கள் தங்கள் தாய் மொழியான உருது மொழியை முதன்மை மொழியாக தேர்வு எழுத அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்வியாண்டே முடியும் நிலையில் இன்னமும் உருதுபாடபுத்தகங்கள் பள்ளிகளில் வழங்கப்படவில்லை அவற்றை உடனடியாக வழங்க வேண்டும், திருவள்ளூவர் பல்கலைகழகத்தில் உருது துறை ஒன்றை அரசு ஏற்படுத்த வேண்டும், பழைய முறைப்படியே உருது பள்ளிகளில் ஆய்வு செய்ய உருது வட்டார கல்வி அலுவலர்களை நியமித்து அவர்களுக்கு அலுவலர்கள் பணியாளர்களுடன் அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் உருது மொழி வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் உதவி புரியும் ஆசிரியர்கள் மற்றும் சிறந்த முறையில் உருது பயிலும் மாணவர்களுக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன.

அடுத்த செய்தி