ஆப்நகரம்

”பார்த்து தண்ணிய செலவு பண்ணுங்க”-தமிழக அரசுக்கு தேசிய நீர் ஆணையம் அறிவுறுத்தல்..!

தமிழ்நாட்டின் நீராதாரங்களில் உள்ள தண்ணீரை கட்டுப்பாட்டோடு செலவு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தேசிய நீர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

TNN 10 Mar 2017, 9:51 pm
தமிழ்நாட்டின் நீராதாரங்களில் உள்ள தண்ணீரை கட்டுப்பாட்டோடு செலவு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தேசிய நீர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
Samayam Tamil use water in reservoirs judiciously cwc tells tn govt
”பார்த்து தண்ணிய செலவு பண்ணுங்க”-தமிழக அரசுக்கு தேசிய நீர் ஆணையம் அறிவுறுத்தல்..!


தேசிய நீர் ஆணையம் என்பது மத்திய நீர் வளத்துறைக்கு கீழ் இயங்கும் ஒரு அமைப்பாகும்.இந்த அமைப்பு நாடு முழுவதும் உள்ள 91 நீர் பிடிப்புப் பகுதிகளை கண்காணித்து வருகிறது.இவற்றில் 6 இடங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன.

இந்நிலையில் தேசிய நீர் ஆணையத்தின் கண்காணிப்பிற்கு கீழ் இருக்கக்கூடிய தமிழக பகுதிகள் சிலவற்றில்,கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 80 சதவீதம் அளவிற்கு நீர் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வரக்கூடிய கோடை காலத்தை சமாளிக்க,தற்போது நீர் ஆதாரங்களில் உள்ள நீரை கட்டுப்பாட்டோடும்,சமயோஜிதமாகவும் பயன்படுத்த வேண்டிய சூழல் இருப்பதாக தேசிய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் நீர் ஆதாரங்களில் இருக்கக்கூடிய நீரின் அளவு எவ்வளவு?குடிநீர் மற்றும் விவசாயம் ஆகியவற்றுக்கு எவ்வளவு நீர் தேவைப்படும்? ஆகியவற்றை துல்லியமாக அளவிட்டு,அதனை சரியான அளவில் பயன்படுத்தினால்,அடுத்த பருவமழை காலம் வரை ஓரளவுக்கு நிலைமையை சமாளிக்க முடியும் எனவும் தேசிய நீர் ஆணையம் கூறியுள்ளது.

Use water in reservoirs judiciously, CWC tells TN govt

அடுத்த செய்தி