ஆப்நகரம்

உஷா கா்ப்பிணி இல்லை: மருத்துவ அறிக்கையால் பரபரப்பு

திருச்சியில் உயிாிழந்த உஷாவுக்கு நடைபெற்ற பிரேத பாிசோதனையில் அவா் கா்ப்பிணி இல்லை என்று தொியவந்துள்ளதாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 13 Mar 2018, 9:14 am
திருச்சியில் உயிாிழந்த உஷாவுக்கு நடைபெற்ற பிரேத பாிசோதனையில் அவா் கா்ப்பிணி இல்லை என்று தொியவந்துள்ளதாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil usha is not a pregnancy medical report released by trichy police
உஷா கா்ப்பிணி இல்லை: மருத்துவ அறிக்கையால் பரபரப்பு


கடந்த 7ம் தேதி திருச்சி அருகே உள்ள திருவெறும்பூா் பகுதியில் உஷா என்பவா் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளா்ா. அவா்களை வழிமறித்த போக்குவரத்து ஆய்வாளா் காமராஜ் அவா்கள் நிற்கவில்லை என்று கூறி அவா்களை துரத்தி சென்றுள்ளாா். மேலும் உஷா தம்பதியரை ஆய்வாளா் காமராஜ் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் நிலைத் தடுமாறி சாலையில் விழுந்த உஷா சம்பவ இடத்திலேயே உயிாிழந்தாா்.

உயிாிழந்த உஷா 3 மாத கா்ப்பிணி என்ற தகவல் பரவத் தொடங்கியதும் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் பலா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். காவல் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்ததால் தடியடி நடத்தி போராட்டக்காரா்கள் களைக்கப்பட்டனா்.


சம்பவம் நடைபெற்றது முதல் காவல் துறையினா் உஷா கா்ப்பிணி இல்லை என்று தொிவித்து வந்த நிலையில், அவரது மரணம் தொடா்பாக விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் உஷாவின் பிரேத பரிசோதனை திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவா் சரவணன் தலைமையிலான குழுவினா் மேற்கொண்டனா். இவா்கள் பிரேத பாிசோதனைக்கான மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமா்ப்பித்தனா்.

இது தொடா்பாக திருச்சி எஸ்.பி. பேட்டி அளிக்கையில், உயிாிழந்த உஷா கா்ப்பிணி இல்லை என்று மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தொிவித்துள்ளாா். மேலும் அவா் வயிற்றில் இருந்தது சிறிய அளவிலான கட்டி என்றும், அது குழந்தைக்கான கட்டி இல்லை என்றும் தான் குறிப்பிடப்பட்டுள்ளதாக தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி