ஆப்நகரம்

குடிநீர் கேட்டு பேருந்துகளை சிறைபிடித்த பொதுமக்கள்

உசிலம்பட்டியில் குடிநீர் கேட்டு 8 அரசு பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Samayam Tamil 15 Mar 2018, 10:33 pm
உசிலம்பட்டியில் குடிநீர் கேட்டு 8 அரசு பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Samayam Tamil usilampatti people protest to provide corporation water
குடிநீர் கேட்டு பேருந்துகளை சிறைபிடித்த பொதுமக்கள்


உசிலம்பட்டி அருகே பாறைப்பட்டியில் மாநகராட்சி குடிநீர் சரியாக விநியோகக்கபடவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து குடிநீர் வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் இன்று திடீர் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக சென்ற 8 அரசு பேருந்துகளை சிறைபிடித்து மாநகராட்சியின் கவனத்தை ஈர்த்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி