ஆப்நகரம்

தொடரும் கந்துவட்டி கொடுமை; நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மற்றொறு துயரம்!

வட்டிக்கு பணம் கொடுக்கும் கந்துவட்டி கும்பல் பல வகையான வட்டி முறைகளை கையாண்டு அவர்களை அச்சுறுத்தி வருகிறது. அவர்களது கொடுமையை தாங்க முடியாமல் பல்வேறு உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்று கொண்டு வருகிறது

Samayam Tamil 14 Nov 2019, 7:03 pm
நெல்லை: கந்துவட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil தற்கொலை செய்ய முயன்ற குடும்பத்தினர்
தற்கொலை செய்ய முயன்ற குடும்பத்தினர்


நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டி பிரச்னை பூதாகரமான பிரச்னையாக உள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை மக்கள் தங்கள் தொழில், குழந்தைகளின் கல்வி, திருமண தேவைகளுக்கு கடன் வாங்கியே வாழ்க்கை நடத்த வேண்டியுள்ள கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

இதனை சாக்காக வைத்து அவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் கந்துவட்டி கும்பல் பல வகையான வட்டி முறைகளை கையாண்டு அவர்களை அச்சுறுத்தி வருகிறது. அவர்களது கொடுமையை தாங்க முடியாமல் பல்வேறு உயிரிழப்பு சம்பவங்கள் தெரிந்தும், தெரியாமலும் தொடர்ந்து நடைபெற்று கொண்டு வருகிறது.

ஓசி சோறுக்கு ஆசைபட்டு 4 லட்சத்தை இழந்த சோகம்!

அந்த வகையில், கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கந்துவட்டி கொடுமையால் கைக்குழந்தையுடன் ஒரு குடும்பமே நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது. இந்த சம்பவம் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் இரண்டு ஆண்டுகளாகியும் அந்த சோகத்தின் வடு மனதை விட்டு இன்னும் நீங்காத நிலையில், அதேபோன்று மற்றுமொறு துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

இரண்டாவது மனைவி மீதும் சந்தேகம்..! 8 மாத ஆண் குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற தந்தை...

திருநெல்வேலி மாவட்டம் மேல கருங்குளத்தை சேர்ந்தவர் அருள்தாஸ். பெயிண்டர் தொழில் செய்து வரும் இவர், தனது தொழிலுக்காக செய்வதற்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குறிச்சி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் காலி மனை பத்திரத்தை அடகு வைத்து ரூ.50 ஆயிரம் வாங்கியதாக தெரிகிறது. தான் வாங்கிய கடனுக்கு ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக வட்டி கட்டியதாகவும், கடந்த 6 மாதமாக தொழில் சரியாக இல்லாத காரணத்தால் வட்டி கட்ட முடியவில்லை எனவும் தெரிவித்துள்ள அருள்தாஸ், வாங்கிய தொகை ரூ.50 ஆயிரமும், வட்டி ரூ.1லட்சமும் செலுத்த வேண்டும் என தினமும் காலையில் வீட்டுக்கு வந்து கிருஷ்ணன் என்பவர் கட்டையால் அடித்து துண்புறுத்துவதுடன், செல்போனையும் பறித்து சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த அருள்தாஸ், தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனை கண்ட பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரிவாள் வெட்டு, சிதறிய ரத்தம், பயணிகள் ஓட்டம் - கொரட்டூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு!

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பாளையங்கோட்டை காவல் துறையினர். விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம், கந்து வட்டி முழுமையாக ஒழிக்கப்பட்டு இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நிகழாமல் தடுக்கப்பட வேண்டும் என நெல்லை மாவட்ட மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி