ஆப்நகரம்

போலீசாருக்கு விடுமுறை ரத்து: உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு!

உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை போலீசாருக்கு விடுமுறை கிடையாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது

Samayam Tamil 19 Apr 2022, 5:10 pm
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மத ரீதியிலான மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் மத ரீதியிலான மோதல்கள் உத்தரப்பிரதேசத்தில் ஏற்படுவதை தடுக்க அம்மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை எடுத்துள்ளார்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


அதன்படி, உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை போலீசாருக்கு விடுமுறை கிடையாது என அந்தமாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ரமலான், அக்‌ஷயதிருதியை போன்ற பண்டிகைகள் வருகிற மே மாதம் 3ஆம் தேதி ஒரே நாளில் வரவுள்ளது. இதனை தொடர்ந்து அசாம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆளுநர் பதவி விலகக் கூடாது; ஆளுநர் பதவியே ஒழிக்கப்பட வேண்டும்!
அந்த வகையில், போலீசார், நிர்வாக அதிகாரிகளுக்கு அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை விடுமுறை ரத்து, ஏற்கனவே விடுமுறையில் உள்ளவர்களின் விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும் உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், விடுமுறையில் உள்ள போலீசார் அடுத்த 24 மணி நேரத்தில் பணிக்கு வர வேண்டும் எனவும் உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி