ஆப்நகரம்

பரோலில் வரும் சசிகலா தங்குவதற்கு 4 இடங்கள் பரிசீலனை

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, ஏழரை மாதங்களுக்கு பின்னர் பரோல் கிடைத்துள்ளது.

TNN 5 Oct 2017, 9:35 pm
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, ஏழரை மாதங்களுக்கு பின்னர் பரோல் கிடைத்துள்ளது.
Samayam Tamil v k sasikala parole where she to stay
பரோலில் வரும் சசிகலா தங்குவதற்கு 4 இடங்கள் பரிசீலனை


சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாம், இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மறுசீராய்வு மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரின் கல்லீரல், நுரையீரல், கிட்னி ஆகியவை பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,

உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவரை நேரில் பார்க்க சசிகலாவுக்கு பரோல் வழங்கபட்டுள்ளது. அப்படி பரோலில் வெளிவரும், சசிகலா சென்னையை அடுத்த சிறுதாவூரில் சசிகலா குடும்பத்தினருக்கு உரிய பங்களா, டிடிவி.தினகரனின் சகோதரர் பாஸ்கரனின் இல்லம், டாக்டர் வெங்கடேஷின் இல்லம், சென்னை தி.நகரில் இளவரசியின் மகள் இல்லம் ஆகிய ஏதாவது ஒன்றில் தங்குவார் என தெரிகிறது.

அடுத்த செய்தி