ஆப்நகரம்

24 மணி நேரமும் தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 22 Aug 2021, 1:57 pm

ஹைலைட்ஸ்:

  • புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது
  • தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் குறிப்பிடத்தக்க இலக்கை எட்டி கொண்டிருக்கிறது
  • தமிழகத்தில் தடுப்பூசி போடும் திட்டத்தை அதிகப்படுத்த முடியும்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசிகளை ஒன்றிய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. மாநில அரசுகள் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை செலுத்தி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதுதவிர, ஆங்காங்கே முகாம்கள் நடத்தியும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசியை விரைவாக செலுத்தி விட வேண்டும் என்பதே தமிழக அரசின் இலக்காக உள்ளது. இதற்கான அனைத்து பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் முடுக்கி விட்டுள்ளார். தடுப்பூசி தயாரிக்கும் பணியில் குறைவான நிறுவனங்களே ஈடுபட்டுள்ளதால், அதனை கொள்முதல் செய்து வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்துக்கு அதிக அளவில் தடுப்பூசி தேவைப்படும் நிலையில், குறைவான தடுப்பூசிகளே ஒதுக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.


இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் அமெரிக்க தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், டி.எம்.எஸ் வளாகத்தில் முதல் முறையாக 24 மணி நேரமும் செயல்பட கூடிய தடுப்பூசி மையத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் குறிப்பிடத்தக்க இலக்கை எட்டி கொண்டிருப்பதாகவும், நாளை முதல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றார்.
சர்ச்சை ஏற்படுத்தியுள்ள கவுசல்யா விவாகரத்து அறிவிப்பும், நீக்கமும்!
இதன் மூலமாக தமிழகத்தில் தடுப்பூசி போடும் திட்டத்தை அதிகப்படுத்த முடியும் என்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் முதன்முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் தகவல் தெரிவித்தார்.

அடுத்த செய்தி