ஆப்நகரம்

ராஜிவ் கொலை வழக்குக் குற்றவாளிகளை விடுவிக்கும்படி வைகோ வலியுறுத்தல்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 7 பேரையும், தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

TNN 4 Jun 2016, 4:41 pm
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 7 பேரையும், தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil vaiko asks tn govt to release rajiv gandhi assassination convicts immediately
ராஜிவ் கொலை வழக்குக் குற்றவாளிகளை விடுவிக்கும்படி வைகோ வலியுறுத்தல்


இவ்வழக்கு தொடர்பாக, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரனை இன்று வைகோ நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, அவரது உடல்நலம் குறித்தும், சிறை நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள மருத்துவ வசதிகள் குறித்தும் வைகோ கேட்டறிந்தார்.

இதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ராஜிவ்காந்தி கொலை வழக்கு ஆயுள்தண்டனை கைதிகள் 7பேரையும் உடனடியாக தமிழகஅரசு விடுதலை செய்யும்படி வலியுறுத்தினார். இவ்விவகாரத்தில், தமிழக அரசு 161-வது சட்டப்பிரிவை பயன்படுத்த முன்வர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தேனி மாவட்டத்தில் தேவாரம் பகுதியில் அமைந்துவரும் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை நிறுத்தும்படியும் அவர் கோரிக்கை விடுத்தார். மத்திய அரசின் நியூட்ரினோ திட்டத்தால் தமிழகத்திற்கு ஏற்படும் அபாயத்தை அதிகாரிகள் மூடி மறைக்க முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டிய வைகோ, இந்த திட்டத்திற்கு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி தரக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி