சென்னை: நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தரமான விலக்கு பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனிடையே, நீர் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்துசெய்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட போது, மீண்டும் தமிழக அரசின் உள் ஒதுக்கீட்டு ஆணையை ரத்து செய்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்தின் வரைவு நாளை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இச்சூழலில், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் மருத்துவம், பொறியியல் நுழைவுத்தேர்வு நடைப்பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனிடையே, நீர் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்துசெய்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட போது, மீண்டும் தமிழக அரசின் உள் ஒதுக்கீட்டு ஆணையை ரத்து செய்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்தின் வரைவு நாளை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இச்சூழலில், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் மருத்துவம், பொறியியல் நுழைவுத்தேர்வு நடைப்பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.