ஆப்நகரம்

இந்தி மொழியவா திணிக்கிறீங்க; எங்க திராவிடம் முறியடிக்கும்டா: கொந்தளித்த வைகோ

இந்தி மொழி திணிப்பிற்கு, மதிமுக பொதுச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

TNN 20 Apr 2017, 12:09 pm
சென்னை: இந்தி மொழி திணிப்பிற்கு, மதிமுக பொதுச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil vaiko condems the act of giving hindi language to tamil people
இந்தி மொழியவா திணிக்கிறீங்க; எங்க திராவிடம் முறியடிக்கும்டா: கொந்தளித்த வைகோ


இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் மத்திய அரசு எங்கும் எதிலும் இந்தி மொழி கட்டாயம் என்பதைச் செயல்படுத்தி வருகின்றது. பல்வேறு மொழி, பண்பாடு, கலாச்சாரங்களைப் பின்பற்றும் பல தேசிய இனங்களின் கூட்டு அமைப்புதான் இந்தியா என்பதை மத்திய அரசு உணராமல் போனால் வேற்றுமையில் ஒற்றுமை என்பது கேள்விக்குறி ஆகும்.

இந்துத்துவக் கொள்கைகளைத் திணிப்பதன் மூலம் இந்தியாவின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருவதும், இந்தி, சமஸ்கிருதத் திணிப்பைச் சட்டமாக்குவதும் கடும் கண்டனத்துக்கு உரியவை. இந்தியைக் கட்டாயமாக்கும் எந்தவித முயற்சிகளையும் 1937 ஆம் ஆண்டில் இருந்து இந்தியை எதிர்த்துப் போராடி வரும் திராவிட இயக்கம் முறியடிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு தனது அறிக்கையில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

Vaiko condems the act of giving Hindi language to Tamil People.

அடுத்த செய்தி