ஆப்நகரம்

ஜெனீவா ஐ.நா. கூட்டத்தில் வைகோ!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பங்கேற்க, ஜெனீவாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

TNN 17 Sep 2017, 11:53 am
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பங்கேற்க, ஜெனீவாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
Samayam Tamil vaiko fly to geneva to participate in un meeting
ஜெனீவா ஐ.நா. கூட்டத்தில் வைகோ!


இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் மனித உரிமை மீறப்பட்டதா என்று ஐ.நா விசாரணை மேற்கொண்டது. இதற்கான, இடைக்கால அறிக்கை ஏற்கனவே ஐ.நாவில் சமர்பிக்கப்பட்டது. இந்த விசாரணையின் முழு அறிக்கை ஜெனிவா கூட்டத்தில் சமர்பிக்கப்பட உள்ளது. 10 நாட்கள் நடக்கும் இந்த ஐநா கூட்டத்தில் பங்கேற்க, வைகோ சென்னையில் இருந்து ஜெனீவா சென்றுள்ளார்.

2009ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதிக் கட்டத்தில், இலங்கை அரசிடம் சரணடைந்தவர்கள் விவரம், போருக்கு பின் தமிழர்கள் பாதுகாப்பு, தமிழர்களின் தற்போதைய நிலை ஆகியவை அறிக்கையில் இடம்பெறும் என்று கருதப்படுகிறது.

அடுத்த செய்தி