ஆப்நகரம்

மதுரையில் கர்ப்பிணி மருத்துவர் உயிரிழப்பு: வைகோ இரங்கல்

மதுரையில் அரசு பெண் மருத்துவர் கொரோனாவால் இறந்ததற்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 9 May 2021, 9:08 pm
மதுரையைச் சேர்ந்த பெண் மருத்துவர் சண்முகப்ரியா அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றி வந்துள்ளார். 8 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் கொரோனா காலத்திலும் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பணிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 நாட்களுக்கு முன்பு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Samayam Tamil கோப்புப்படம்


அவரது இறப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் மதிமுக பொது செயலாளர் வைகோ இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதி அவர் கூறியுள்ளதாவது, "மதுரையில் எட்டு மாத கர்ப்பிணியான சண்முகப்பிரியா என்ற மருத்துவர், கொரோனா தாக்கி இறந்த செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றது.

கடந்த ஓராண்டில், இவரைப்போன்ற மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், முன்களப் பணியாளர்கள் ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்து விட்டனர். தற்போது, நாடு முழுமையும் இலட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு, தொற்று பரவி வருகின்றது. மருத்துவமனைகளில் கடும் நெருக்கடி நிலவுகின்றது.

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயார்: மே 11 முதல் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும் - தங்கம் தென்னரசு

எனவே, வேறு வழி இன்றி, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு முடக்கம் என தமிழ்நாடு அரசு அறிவித்து இருக்கின்றது.

கொரோனாவைத் தடுப்பதற்காகத் தமிழக அரசு மேற்கொள்கின்ற அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்; சமூக விலகலைக் கடைப்பிடிப்போம்; வீட்டுக்கு உள்ளே இருக்கும்போதும் முகக்கவசம் அணிந்திடுங்கள்; கைகளை அடிக்கடி கழுவிக் கொள்ளுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து கொரோனா பரவலைத் தடுப்போம்.

சண்முகப்பிரியா மறைவால், வேதனையில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி