சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அரசியலில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னை ராணி சீதை மன்றத்தில் “குற்றம் சாட்டுகிறேன்” என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் கருத்துகளை வெளியிட்டதாக கூறி ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் தேசத் துரோக வழக்கு பதியப்பட்டது.
இந்நிலையில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் இந்த தேசத்துரோக வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வைகோ மனுத்தாக்கல் செய்திருந்தார்.மேலும் தானாக முன் வந்து ஏப்ரல் 3-ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தின் 13வது குற்றவியல் நடுவர் கோபிநாத் முன்னிலையில் வைகோ சரணடைந்தார். நீதிபதியிடம் பிணையில் செல்ல விருப்பமில்லை என வைகோ தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே வைகோவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வைகோ கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
நாற்பது நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் வைகோ சிறையில் இருந்தவாரே அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். மேலும் மிகுந்த மன சோர்வுடன் இருக்கும் வைகோ அரசியலில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அர்சியல் கட்சியான மதிமுகவை இயக்கமாக மாற்றிவிடாலாம் என்னும் முடிவிலும் வைகோ இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னை ராணி சீதை மன்றத்தில் “குற்றம் சாட்டுகிறேன்” என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் கருத்துகளை வெளியிட்டதாக கூறி ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் தேசத் துரோக வழக்கு பதியப்பட்டது.
இந்நிலையில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் இந்த தேசத்துரோக வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வைகோ மனுத்தாக்கல் செய்திருந்தார்.மேலும் தானாக முன் வந்து ஏப்ரல் 3-ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தின் 13வது குற்றவியல் நடுவர் கோபிநாத் முன்னிலையில் வைகோ சரணடைந்தார். நீதிபதியிடம் பிணையில் செல்ல விருப்பமில்லை என வைகோ தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே வைகோவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வைகோ கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
நாற்பது நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் வைகோ சிறையில் இருந்தவாரே அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். மேலும் மிகுந்த மன சோர்வுடன் இருக்கும் வைகோ அரசியலில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அர்சியல் கட்சியான மதிமுகவை இயக்கமாக மாற்றிவிடாலாம் என்னும் முடிவிலும் வைகோ இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.