சென்னை: தன்னிடம் வேலை பார்க்கும் கடை நிலை பெண் ஊழியரை தன் உள்ளாடைகளை துவக்குமாறு கூறிய சத்தியமங்கலம் நீர் சார்பு நீதிபதி செல்வத்தின் நடவடிக்கைக்கு மதிமுக பொது செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "இச்செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமோ என்ற சந்தேகம் எழுகிறது.
இது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப் பட வேண்டும். மேலும், நீதிபதி செல்வத்தை பணி இடை நீக்கம் செய்ய வேண்டும்.
இது போன்ற சம்பவங்கள் நீதி துறையின் மீது நாம் கொண்ட நம்பிக்கையை அசைத்து பார்க்கிறது.
நீதித்துறை மட்டுமல்ல காவல் துறை மற்றும் மற்ற அரசு துறைகளிலும் இத்தகைய கொடுமைகள் நிகழ்வதை தடுக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று வைகோ தன் அறிக்கையில் கூறியுள்ளார்.
முன்னதாக, ஈரோடு மாவட்டம், சத்தியமங்களலம் சார்பு நீதிமன்ற நீதிபதி செல்வம், நீதிமன்றத்தில் பணிபுரியும் கடைநிலை பெண் ஊழியர் வசந்தி என்பவருக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி குரிப்பனை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், “நீர் சார்பு நீதிபதி வீட்டில் துவைப்பதற்கு போடும் துணிகளை சரிவர துவைக்காமல், குறிப்பாக உள்ளே அணியும் துணிகளை அறுவறுப்பு அடைந்து தூக்கி வீசி எறிந்து விடுவதாகவும், மேலும் அதிகாரி மற்றும் துணைவியார் இது குறித்து கேட்டதற்கு எதிர்த்துப் பேசிய உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு தகுந்த முகாந்திரத்தை ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு கோரப்படுகிறது” என்று குறிப்பாணை அனுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "இச்செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமோ என்ற சந்தேகம் எழுகிறது.
இது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப் பட வேண்டும். மேலும், நீதிபதி செல்வத்தை பணி இடை நீக்கம் செய்ய வேண்டும்.
இது போன்ற சம்பவங்கள் நீதி துறையின் மீது நாம் கொண்ட நம்பிக்கையை அசைத்து பார்க்கிறது.
நீதித்துறை மட்டுமல்ல காவல் துறை மற்றும் மற்ற அரசு துறைகளிலும் இத்தகைய கொடுமைகள் நிகழ்வதை தடுக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று வைகோ தன் அறிக்கையில் கூறியுள்ளார்.
முன்னதாக, ஈரோடு மாவட்டம், சத்தியமங்களலம் சார்பு நீதிமன்ற நீதிபதி செல்வம், நீதிமன்றத்தில் பணிபுரியும் கடைநிலை பெண் ஊழியர் வசந்தி என்பவருக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி குரிப்பனை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், “நீர் சார்பு நீதிபதி வீட்டில் துவைப்பதற்கு போடும் துணிகளை சரிவர துவைக்காமல், குறிப்பாக உள்ளே அணியும் துணிகளை அறுவறுப்பு அடைந்து தூக்கி வீசி எறிந்து விடுவதாகவும், மேலும் அதிகாரி மற்றும் துணைவியார் இது குறித்து கேட்டதற்கு எதிர்த்துப் பேசிய உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு தகுந்த முகாந்திரத்தை ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு கோரப்படுகிறது” என்று குறிப்பாணை அனுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.