ஆப்நகரம்

நீட் தேர்வு முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்;வைகோ!

மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தவும், முறைகேடுகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

Samayam Tamil 11 Feb 2018, 12:30 pm
மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தவும், முறைகேடுகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
Samayam Tamil vaiko talks about neet exam
நீட் தேர்வு முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்;வைகோ!


இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது, ''ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே வரி, ஒரே கல்விக் கொள்கை என்கிற இந்துத்துவா கோட்பாட்டை நடைமுறைப்படுத்திட நாட்டின் பன்முகத்தன்மையை வேரறுக்கும் வேலையை பாஜக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

நீட் நடத்துவதிலிருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என்று, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டவரைவை, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பரிந்துரை செய்து அனுப்பாமல் மத்திய பாஜக அரசு ஓராண்டு காலமாக கிடப்பில் போட்டுவிட்டது. எடப்பாடி பழனிசாமி அரசும் தமிழக மாணவர்களை நம்பிக்கை பெற வைத்து கடைசியில் கைவிரித்தது. இதன் விளைவாக மருத்துவக் கனவுடன் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட துயரம், தமிழகத்தையே உலுக்கியது.

தற்போது மே 6-ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும், மார்ச் 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் சிபிஎஸ்சி மாணவர்கள் மட்டுமே அதிக அளவில் வெற்றி பெற்றனர்.

எனவே இந்த ஆண்டாவது மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்த வேண்டும். மேலும் நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளைத் தவிர்த்து, மாணவர்கள் பாதிக்கப்படாதவாறு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

அடுத்த செய்தி