ஆப்நகரம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வைகோ வலியுறுத்தல்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

TNN 24 Feb 2016, 8:08 pm
சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil vaiko urges to release 7 members including perarivalan
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வைகோ வலியுறுத்தல்


ம.தி.மு.க வின் 24வது பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்தின் இடையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில் , “ மக்கள் நலக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையவுள்ளதாக தெரிவித்தார்.தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணையும் என்கிற நம்பிக்கை உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் ,நளினியின் தந்தை இறப்பதற்கு முன்பு 12 மணி நேரம் பரோலில் விடுவிக்கப்பட்டது போதாது என்றும் குறைந்தபட்சம் 2 வாரம் பரோலில் விட வேண்டும் என்று கூறினார். முன்னதாக நளினியின் தந்தை, உடல் நலம் சரியில்லாமல் இருந்த போது, நளினியை பரோலில் வெளி வர தமிழக அரசு மறுத்துவிட்டதாக , தமிழக அரசை குற்றம் சாட்டியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், பேரறிவாளவன் தந்தையும் உடல் நலக் குறைவோடு இருப்பதாகவும் , எனவே பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி