ஆப்நகரம்

வைகோ மக்கள் செல்வாக்கினை விரைவில் இழப்பார்- தமிழிசை

பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேட்டியளித்தார். விஜயகாந்தின் தேமுதிக மற்றும் புதிய தமிழகம் அதிமுக, பாஜ, பாமக கூட்டணியில் ஆகியவை சேரும் எனத் தகவல் அளித்துள்ளார்.

Samayam Tamil 27 Feb 2019, 5:50 pm
பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேட்டியளித்தார்.
Samayam Tamil tamilisai sundararajan bjp


விஜயகாந்தின் தேமுதிக மற்றும் புதிய தமிழகம் அதிமுக, பாஜ, பாமக கூட்டணியில் ஆகியவை சேரும் எனத் தகவல் அளித்துள்ளார்.

தேமுதிக மற்றும் புதிய தமிழகம் ஆகியவை மக்கள் நலனுக்கு பாடுபடும் கட்சிகள். நாட்டின் நலனுக்காக அவர்கள் உழைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். எங்கள் கூட்டணி மட்டுமே நாட்டின் நலனுக்குப் பாடுபடும் கூட்டணி ஆகும்.

வரும் வெள்ளியன்று பிரதமர் மோடி கன்யாகுமரிக்கு வருகை தரவுள்ளார். அதற்கான மேற்பார்வைக்கு தமிழிசை செல்ல உள்ளார்.

தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறதே என கேட்கப்பட்டதற்கு, அதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றார். எதிர்கட்சிகளில் கூட்டனி பற்றி எங்களுக்குக் கவலை இல்லை என்றார்.

வைகோவின் கருப்புக்கொடி போராட்டம் அர்த்தமற்றது என விமர்சித்த அவர் வைகோ இவ்வாறு தொடர்ந்து போராட்டம் செய்துவந்தால் மக்கள் மத்தியில் விரைவில் செல்வாக்கினை இழப்பார், கூடிய விரைவில் நான் கூறியதை அவரும் உணருவார் என்றார்.

இண்டலிஜன்ஸ் ரிப்போர்ட் தங்களுக்கு சாதகமாக வந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜ., வெல்வது உறுதி. வென்ற பின்னர் நல்ல திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லுவோம் என்றார்.

அடுத்த செய்தி