ஆப்நகரம்

வைரமுத்து கூறியதில் தவறில்லை; சென்னை உயர்நீதிமன்றம்

ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறியதில் தவறில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Samayam Tamil 19 Jan 2018, 2:24 pm
ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறியதில் தவறில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது
கடந்த 7ம் தேதி, ஆழ்வார் திருமகள் ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் ஒன்றில் கவிஞர் வைரமுத்து கலந்த கொண்டார். அப்போது பேசிய அவர், வரலாற்று ஆய்வுகளை மேற்கோளாக குறிப்பிட்டு, சர்ச்சையான கருத்துக்களை கூறியுள்ளார்.
Samayam Tamil vairamuthu filed petition chennai high court cancel case on him
வைரமுத்து கூறியதில் தவறில்லை; சென்னை உயர்நீதிமன்றம்

இதற்கு பாஜக உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்த நிலையில், வைரமுத்து மற்றும் தினமணி நாளிதழ் ஆசிரியருக்கு எதிராக சென்னை ராஜபாளையத்தில் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்யப்பட்ட து
இதைத் தொடர்ந்து, எதிராக சமுதாய நல்லிணக்கப் பேரவையைச் சேர்ந்த முருகானந்தம், என்பவர் கொளத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார். இதே போல், இந்து முன்னணி நிர்வாக முருகேசன் என்பவர் சென்னை சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தார்.

இதற்கிடையே கொளத்தூர் புகாரில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வைரமுத்து வழக்கு தொடர்ந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் கூறிய கருத்துக்களை தான் வைரமுத்து கூறியதாக அவரது தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

மேலும், ஆண்டாளின் பெருமைகளை வைரமுத்து பேசி, ஆராய்ச்சாளரின் கட்டுரைக்கு குற்றச்சாயம் பூசியதாகவும் வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், வைரமுத்து கூறிய கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை என்றும் ஆராய்ச்சியாளரின் கட்டுரையைத்தான் மேற்கோள் காட்டியதாகவும் தெரிவித்து, வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தது.

அடுத்த செய்தி