ஆப்நகரம்

வைரமுத்து மீண்டும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் - தமிழிசை

ஆண்டாள் குறித்து வைரமுத்து தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டால் மட்டும் பத்தாது. ஒருமுறையாவது மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தராஜன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 19 Jan 2018, 7:14 pm
சென்னை : ஆண்டாள் குறித்து வைரமுத்து தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டால் மட்டும் பத்தாது. ஒருமுறையாவது மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தராஜன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil vairamuthu must give apology with fulfilled says tamilisai
வைரமுத்து மீண்டும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் - தமிழிசை


சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கவிஞர் வைரமுத்து, 12 ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வாரும், வைணவ பெண் கடவுளாக போற்றப்படும் ஆண்டாள் குறித்து மேற்கோள் காட்டி கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதையடுத்து ஹெச் ராஜா, தமிழிசை என பலரும் வைரமுத்துவுக்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்னரும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என திரையுலகினர் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக் பாஜக தலைவர் தமிழிசை வைரமுத்து தெரிவித்த கருத்தால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதனால் அவர் வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது, தமிழக மக்களிடம் மனதார பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழிசை தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி