ஆப்நகரம்

நாட்டையும் மொழியையும் சமமாக மதிக்க வேண்டும்: வைரமுத்து

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு விஜயேந்திரர் மரியாதை செலுத்தவில்லை என்று சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில் இது குறித்து பாடலாசிரியர் வைரமுத்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Jan 2018, 1:00 pm
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு விஜயேந்திரர் மரியாதை செலுத்தவில்லை என்று சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில் இது குறித்து பாடலாசிரியர் வைரமுத்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil vairamuthu opens up on nation and mother tongue
நாட்டையும் மொழியையும் சமமாக மதிக்க வேண்டும்: வைரமுத்து


சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்-சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழாவில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் பங்கேற்றார். அவர் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்கவில்லை. ஆனால், தேசிய கீதம் இசைக்கும் போது மட்டும் எழுந்து நின்றார். அவரது இந்தச் செயல் தாய்மொழியை அவமதிப்பதாக உள்ளது என்று சர்ச்சை வெடித்துள்ளது.

இந்நிலையில், பாடலாசிரியர் வைரமுத்து இது பற்றி தன் கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். “தேசிய கீதம் என்பது தாய்நாட்டை மதிப்பது. தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தாய்மொழியை மதிப்பது. இரண்டும் சம அளவில் மதிக்கப்படவேண்டியவை” என தெரிவித்துள்ளார்.

ஆண்டாளை தேவதாசி என்று கூறி சர்ச்சையில் மாட்டிக்கொண்டு திண்டாடும் வைரமுத்து, அதற்கான கண்டனங்கள் இன்னும் ஓயாத நிலையில் இவ்வாறு கூறியுள்ளார்.

அடுத்த செய்தி