ஆப்நகரம்

வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் மருத்துவ பரிசோதனை எடுக்க வேண்டும்: சின்மயி

வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என்று பாடகி சின்மயி டுவீட் செய்துள்ளார்.

Samayam Tamil 14 Oct 2018, 4:40 pm
வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என்று பாடகி சின்மயி டுவீட் செய்துள்ளார்.
Samayam Tamil chinmayi-sripaada-and-vairamuthu


கவிஞர் வைரமுத்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள வைரமுத்து, வீடியோ மூலம் பேசினார். அதில் அவர்,’என் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் முழுக்க முழுக்க பொய்யானவை. முற்றிலும் உள்நோக்கம் உடையவை. அவை உண்மையானவையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடரலாம். சந்திக்க காத்திருக்கிறேன். மூத்த வழக்கறிஞர்களோடும் அறிவுலகத்தின் ஆண்டோர்களோடும் கடந்த ஒரு வாரமாக கலந்தாலோசித்து வந்தேன். அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்துள்ளேன். எதிர்கொள்ள தயராக இருக்கிறேன். நீங்கள் வழக்கு போடலாம். சந்திக்க காத்திருக்கிறேன். நான் நல்லவரா கெட்டவரா என்பதை இப்போது முடிவு செய்யவேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும். நீதிக்கு தலை வணங்குகிறேன்'. இவ்வாறு கூறினார்.

இந்நிலையில், வைரமுத்துவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில், அவருக்கு உண்மை கண்டறியும் மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி