ஆப்நகரம்

அதிமுக பிளவுக்கு இந்த இருவர் தான் காரணமா? வைத்தியை நோக்கி திரும்பும் கேள்விகள்!

ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்தை குறி வைத்து இபிஎஸ் ஆதரவாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் பேசி வருகின்றனர்.

Samayam Tamil 3 Oct 2022, 10:57 am
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய பேச்சு அரசியல் அரங்கில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil vaithiingam sp velumani


ஓபிஎஸ்ஸுக்கு எந்த வகையிலும் மரியாதை குறைவு ஏற்படக் கூடாது என இணை பொதுச்செயலாளர் பதவி அளிக்க உறுதி அளிக்கப்பட்டது. அவரது மகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்க முன்வந்தோம். ஆனால் அவர்கள் ஏற்க மறுத்தனர்.

ஓபிஎஸ்ஸிடம் தனியாக எங்களால் பேச முடியவில்லை. வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகரன் ஆகியோர் எப்போதும் உடனிருப்பர். இவர்கள் அனைவரும் அதிமுக ஒன்று சேரக்கூடாது என்பதில் முக்கிய பங்கு வகித்தனர்.

கடைசி கட்டப் பேச்சுவார்த்தையின் போது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை வைத்திலிங்கம் தாக்க முற்பட்டார். அதிமுக பிளவுபட வேண்டும் என்பதே அவரது எண்ணம். அதனை அவர் நிறைவேற்றி விட்டார். அதனால் தான் பேச்சுவார்த்தை வேண்டாம் என வந்து விட்டோம்” என தங்கமணி கொட்டித் தீர்த்துவிட்டார்.

ஓபிஎஸ் தலைமையில் அணி உருவானாலும் எடப்பாடி பழனிசாமி தரப்பின் முழு எதிர்ப்பும் வைத்திலிங்கம் மீது தான் உள்ளது. இது குறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.

மணியை இறக்கி ஆழம் பார்க்கும் எடப்பாடி? ஓபிஎஸ்ஸுக்கு வெள்ளைக் கொடி?

“சமரசத்துக்கு எப்போதும் சம்மதிப்பவர் தான் ஓபிஎஸ். ஆனால் இந்த முறை அவர் இவ்வளவு தூரம் முரண்டு பிடிக்கிறார் என்றால் அதற்கான காரணம் மிக எளிமையானது. அவர் அந்த முடிவுக்கு வந்தாலும் உடன் இருப்பவர்கள் அவருக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்” என்று கூறுகிறார்கள்.

தங்கமணி பேசும் போது வைத்திலிங்கத்தை குறிப்பிட்டு சொல்வது ஏன்? அவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நிலைப்பாடு எடுக்க என்ன காரணம் எனக் கேட்டோம். அதற்கு பெயர் குறிப்பிட வேண்டாம் என்று சிலர் பேசத் தொடங்கினர். “வைத்திலிங்கம் சசிகலா ஆதரவு நபர். சசிகலா சொல்லி தான் அவர் ஓபிஎஸ் பக்கம் நிற்கிறார் என்பது ஒரு தகவல். அது ஒருபுறம் இருக்கட்டும்.

அதே சமயம் வைத்திலிங்கத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் கூட எந்த பிரச்சினையும் இல்லை. எடப்பாடி அணியில் எஸ்.பி.வேலுமணியின் கரம் ஓங்குவது தான் வைத்திலிங்கத்துக்கு பிரச்சினை. இவர்கள் இருவருக்கும் ஏற்கெனவே இருக்கும் பிரச்சினைகள் தான் இரு அணிகளையும் இணையவிடாமல் தடுக்கிறது.. ஆனால் விரைவில் இரு அணிகளும் சங்கமிக்கும்” என்று கூறுகிறார்கள்.

அடுத்த செய்தி