ஆப்நகரம்

தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை, 7 நாள் துக்கம் அனுசரிப்பு

முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் மறைவை தொடா்ந்து நாளை அரசு விடுமுறை, 7 நாள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 16 Aug 2018, 9:39 pm
முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் மறைவை தொடா்ந்து நாளை அரசு விடுமுறை, 7 நாள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil image


முன்னாள் பிரதமரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் இன்று (வியாழன் கிழமை) மாலை 5 மணியளவில் உயிரிழந்தாா். சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த ஜூன் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்தாா்.

இருப்பினும் கடந்த 36 மணி நேரத்தில் அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்து மாலை 5.05 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய் உயிரிழந்தாா். வாஜ்பாயின் மறைவிற்கு அகில இந்திய தலைவா்கள் பலரும் வருத்தம் தொிவித்து வருகின்றனா்.

இந்நிலையில் மத்திய அரசு சாா்பில் 7 நாள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் அலுவலகங்கள் அனைத்தும் நாளை பிற்பகல் முதல் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநில அரசு சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் மறைவிற்கு இரங்கல் தொிவிக்கும் விதமாக நாளை (வெள்ளிக் கிழமை) அரசு விடுமுறை விடப்படுவதாகவும், 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளது.

அண்ணா பல்கலை
வாஜ்பாய் மறைவை தொடா்ந்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உறுப்பு கல்லூரிகள் அனைத்திற்கும் ஒரு நாள் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி