ஆப்நகரம்

'ஆதலினால் காதல் செய்வீர்': பள்ளி சுவரில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

காதலர் தினத்தையொட்டி, பள்ளிகள், பொது இடங்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பொதுமக்களை முகம்சுளிக்க வைத்துள்ளது.

Samayam Tamil 15 Feb 2020, 1:22 am
பிப்ரவரி 14 ஆம் நாளான நேற்று காதலர் தினமாக (வேலண்டைன்ஸ் டே) உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. தமிழகத்தை பொருத்தவரை காதலர் தினத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் உள்ளது.
Samayam Tamil பள்ளி சுவரில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு


இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பல்வேறு பள்ளிகளின் சுவர்கள், முக்கிய சந்திப்புகள் மக்கள் கூடும் இடங்களில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் "காலமெல்லாம் காதல் வாழ்க" எனவும், "ஆதலினால் காதல் செய்வீர்", "உலக காதலர் தின வாழ்த்துக்கள்" என போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

நாய்களுக்கு கல்யாணம் முடிச்சு வைச்ச இந்து அமைப்பினர்!

மேலும் இந்த போஸ்டரில் "சாதி, மதம், ஆணாதிக்கம், மூடநம்பிக்கை இல்லாத, அன்பும் அறிவும் ஆட்சி செய்கிற பொறுப்புமிக்க சமத்துவம் மிக்க காதலை ஆதரிப்போம் வரவேற்போம்" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. பள்ளி அருகே இந்திய மாணவர் சங்கம் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காதலர் தினத்தை காதல் நகரில் கொண்டாடிய ரஜினி மகள்

பள்ளி பிள்ளைகள் காதல் செய்வதை போன்று ஏற்கெனவே சினிமாக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், பள்ளி சுவர்களில் பள்ளிப் பருவ பிள்ளைகளின் மனதை கெடுக்கும் விதத்தில் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

அடுத்த செய்தி