ஆப்நகரம்

முதல்வர் பிரச்சாரக் கூட்டத்திற்கு சென்ற வேன் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற அதிமுகவினரின் வேன் கவிழ்ந்ததில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் அவர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

Samayam Tamil 24 Mar 2019, 1:38 pm
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற அதிமுகவினரின் வேன் கவிழ்ந்ததில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் அவர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil saljbal


வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கேவிகுப்பத்தில் இன்று வேலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து தமிழகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்யவிருந்தார். இதில் கலந்துகொள்வதற்காக லத்தேரி அருகேயுள்ள விழுந்தக்கால் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் டாடா ஏஸ் மினி வேன் மூலம் சென்றனர்.

அப்போது கேவிகுப்பம் அருகில் குறுக்கே வாகனம் ஒன்றின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பிரேக் போட்ட போது வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு கேவிகுப்பம் அரசு ஆரம்பசுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஒருவர் கூட இல்லாததால் ஆத்திரமடைந்த மக்கள் லத்தேரி- கேவிகுப்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர் பின்னர் அங்கு வந்த கேவிகுப்பம் காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி படுகாயமடைந்தவர்களை உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது முதல்வர் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்று விபத்தில் சிக்கியவர்களுக்கு கேவிகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் ஒருவர் கூட இல்லாததால் மக்கள் மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி