ஆப்நகரம்

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக கைது

பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக பிடிபட்டார்.

TNN 28 Mar 2017, 9:30 pm
உளுந்தூர்பேட்டை: பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக பிடிபட்டார்.
Samayam Tamil vao arrested for getting bribe in tamilnadu
லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக கைது


உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் நாச்சியார்கோயிலின் கிராம நிர்வாக அலுவலர் சௌந்தர்ராஜன். இவர், பட்டா மாற்றம் செய்து தருவதற்காக லஞ்சமாக பணம் பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமையன்று சௌந்தர்ராஜனைச் சந்திக்க வந்த பாலமுருகன் என்பவரிடம் அவர் ரூ.8000 லஞ்சமாகப் பெற்றுள்ளார். அப்போது, அங்கிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கைதுசெய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளனர்.

அடுத்த செய்தி