சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ள நிலையில் வருவாய் துறை பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளதாவும் வட தமிழகத்தில் இதனால் கனமழை பெய்யும் என்றும் தமிழக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்களுக்கு வருவாய்துறை வெளியிட்டுள்ள அறிவுரைகள் பின்வருமாறு
1. நீர் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் உள்ளவர்கள் உடனடியாக மேடான பகுதிக்குச் செல்ல தயாராக இருக்க வேண்டும்.
2. கதவு, ஜன்னல், கூரை போன்றவற்றை புயல் காற்று சேதப்படுத்தலாம் என்பதால் அவற்றை இறுக்கமாக மூடி வைத்துக்கொள்ள வேண்டும்.
3. தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய ஊடங்கள் மூலம் வானிலை குறித்த தகவல்களை பொதுமக்கள் தொடர்ந்து அறிந்து வர வேண்டும்.
4. சமைக்காமல் உண்ணக்கூடிய உணவுகளையும் குடிநீரையும் சில நாட்களுக்கு போதிய அளவு இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும்.
5. மின் கம்பிகள் சாலைகளில் அறுபட்டு விழலாம் என்பதால் வெளியில் செல்பவர்கள் கவனமாகச் செல்ல வேண்டும்.
6. வெளியில் செல்பவர்கள் பாதுகாப்பிற்காக கையில் ஒரு கம்பை எடுத்துச்செல்வது நல்லது.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளதாவும் வட தமிழகத்தில் இதனால் கனமழை பெய்யும் என்றும் தமிழக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்களுக்கு வருவாய்துறை வெளியிட்டுள்ள அறிவுரைகள் பின்வருமாறு
1. நீர் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் உள்ளவர்கள் உடனடியாக மேடான பகுதிக்குச் செல்ல தயாராக இருக்க வேண்டும்.
2. கதவு, ஜன்னல், கூரை போன்றவற்றை புயல் காற்று சேதப்படுத்தலாம் என்பதால் அவற்றை இறுக்கமாக மூடி வைத்துக்கொள்ள வேண்டும்.
3. தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய ஊடங்கள் மூலம் வானிலை குறித்த தகவல்களை பொதுமக்கள் தொடர்ந்து அறிந்து வர வேண்டும்.
4. சமைக்காமல் உண்ணக்கூடிய உணவுகளையும் குடிநீரையும் சில நாட்களுக்கு போதிய அளவு இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும்.
5. மின் கம்பிகள் சாலைகளில் அறுபட்டு விழலாம் என்பதால் வெளியில் செல்பவர்கள் கவனமாகச் செல்ல வேண்டும்.
6. வெளியில் செல்பவர்கள் பாதுகாப்பிற்காக கையில் ஒரு கம்பை எடுத்துச்செல்வது நல்லது.