ஆப்நகரம்

இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வாசன் கோரிக்கை

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 9 தமிழக மீனவர்களை விடுவிப்பது, அவர்களின் மீன்பிடி படகுகளை மீட்டு தருவதும் மத்திய அரசின்கடமை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி. கே. வாசன் கூறியுள்ளார்

TNN 8 Apr 2016, 11:11 am
சென்னை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 9 தமிழக மீனவர்களை விடுவிப்பதும், அவர்களின் மீன்பிடி படகுகளை மீட்டு தருவதும் மத்திய அரசின் கடமை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி. கே. வாசன் கூறியுள்ளார்.
Samayam Tamil vasan urges central govt to ensure release of tn fishermen
இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வாசன் கோரிக்கை


இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி. கே. வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த புதன்கிழமையன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அனலைத்தீவு அருகே இந்த மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 9 மீனவர்களை கைது செய்து மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியுள்ளனர்.

தற்போது தான் இலங்கை அரசு அந்நாட்டு சிறையில் வாடிய 99 தமிழக மீனவர்களை விடுவித்தது. தற்போது மீண்டும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது, அவர்களின் பிடிவாத போக்கை காட்டுகிறது.

மத்திய பாஜக அரசு இலங்கை அரசோடு தொடர்பு கொண்டு சிறைபிடிக்கப்பட்ட 9 தமிழக மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் மீன்பிடி படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் மீன்பிடி தொழில் தங்குதடையின்றி நடக்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும்" என்று வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி